MY STRUGGLE

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை.

விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

www.admk2011.yolasite.com


ஆச்சரியம் ஆனால் உண்மை.

அறியாத மக்களிடம் அவர்களுக்கு தெரியாமலே தினமும் கிரிக்கெட் மெஜஸ்-க்கு இவ்வளவு காசு, காலர்டியுன்-க்கு இவ்வளவு காசு என மக்களை வாட்டி வதைக்கும் செல்போன் கம்பெனியிடமிருந்து அவர்கள் வசூலித்த பணத்தை திரும்ப பெற்றேன்.


ஏர்செலில் இருந்து தினமும் ஐ.பி.எல் கிரிக்கெட் நியூஸ் வந்து கொண்டே இருந்தது.என்னடா நம்முடைய விருப்பம் இல்லாமலே மெஜேஸ் வருகிறது என customer care "ஐ தொடர்புகொண்டால் தினமும் 60பைசா என்னுடைய கணக்கிலிருந்து வசூலிப்பது தெரிந்தது.என்னுடைய விருப்பம் இல்லாமல் எப்படி மெஜேஸ் அனுப்பலாம் என்றவுடன் 24 மணிநேரத்தில் கட் செய்து விடுவோம் என்றார்கள்.4 நாட்கள் தொடர்ச்சியாக customer care "ஐ தொடர்புகொண்டால் உடைந்த ரெகார்ட்டு மாதிரி சொன்னதையே சொல்கிறார்கள் ஆனால் கிரிக்கெட் மெஜேஸ் வந்து கொண்டே இருக்கிறது."COMPLAINT MAIL" மெயில் அனுப்பவேண்டிய இடத்திற்கு அனுப்பிய பிறகு அவர்கள் பிடித்த ரூ.12.50 என்னுடைய கணக்கில் திரும்ப வந்தது.நீங்களும் பைட் பண்ணுங்கள்.

RE: POOR CUSTOMER CARE SERVICE.UNWANTED CRICKET SMS WITHOUT CUSTOMER'S CHOICEInbox x

RoTN - Appellate (E) <appellate.tn@aircel.co.in>

Apr 14 (2 days ago)

to me

Dear Sir,

Greetings from Aircel!

With reference to your E-mail dated 11th April 2015 regarding balance deduction, we would like to inform you that an amount of Rs.12.50/- would be posted to your number as talktime within 24 working hours.

Also, kindly note that the CRICKET ALERT had been deactivated with effect from 13/04/2015.

Your Appellate reference number is 1-18836878771.

We value our relation and look forward to continue our good association.

Thanking you and assuring you of our best services at all times.

Warm Regards

Appellate Authority

AIRCEL LIMITED


Note: Kindly note that the working hours for Appellate Authority is from Monday to Friday between 10.00 am to 6:00 pm.

PS: In case you require any further assistance, please

Ø Call the toll free number 121 available only from your local Aircel mobile.

Ø Call at 9842012345 in case you are not using an Aircel number (not a toll free number)

Ø Mail us at care.tn@aircel.co.in

Ø In case you are not satisfied with the resolution, you may raise an appeal within 30 days of SR resolution.

Empower yourself and manage your Aircel prepaid or postpaid account online by visiting us at www.aircel.com


புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை.

விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.


admk2011

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை.விதைக்கப்பட்டிருக்கிறார்கள்....

admk2011.yolasite.com



Like · Comment · Share

John Samuel, Yovan Raj and 2 others like this.



Paul Robert Good work Thambi..

10 hrs · Like




Yovan Raj Gud maps

10 hrs · Like




John Samuel Always fight for justice. Good effort!

10 hrs · Like

****************************************************************************************************************************************************

திருப்பூரி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த சமயம் ஒரு கம்பெனியிலிருந்து  மற்றொரு கம்பெனிக்கு மாறுவது அங்கு சர்வ சாதாரணம்.

 

பழைய கம்பெனியில் பிடித்தம் செய்த பி.எப்.பணத்தை பெரும்பாலானோர் அப்பொழுதே தங்களுடைய கணக்கில் வரவு வைக்கும்படி  எழுதிக்கொடுத்துவிடுவர்.

 

புதிய நடைமுறைப்படி பழைய கம்பெனியில் உள்ள நிலுவைத்தொகையுடன் இப்பொழுது வேலைசெய்யும் நிறுவனத்தினுடைய கணக்கையும் இணைத்து மொத்தமாக பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

 

அப்படி எழுதிக்கொடுத்து 5 வருடங்களாக இரண்டு கணக்கையும் இணைக்காமல் வைத்திருக்கிறார்கள்.

பழைய கம்பெனியின் பி.எப்.கணக்குகள் பி.எப்.அலுவலகத்தின் முதல் தளத்திலும், புதிய கம்பெனியின் பி.எப்.கணக்குகள் பி.எப்.அலுவலகத்தின் இரண்டாவது தளத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். முதல் தளத்திலிருந்து இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை என இரண்டாம் தளத்தில் உள்ளவர்களும்,நாங்கள் ஏற்கனவே அனுப்பிவிட்டோம் என முதல் தளத்தில் உள்ளவர்களும் அலைகழிக்க எங்களுடைய பி,எப் அலுவலகம் செல்லும் நபரிடம் மிக கடுமையாக எச்சரித்தேன். இன்னும் 15 நாட்களுக்குள் வரவில்லையெனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்பேன் என்றேன். பி,எப் அலுவலகம் செல்லும் நபர் அப்படி நீங்கள் கேள்வி எழுப்பினால் அது நம்முடைய கம்பெனிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தி தரும். வேறு ஏதாவது வேலையாக சென்றால் செய்து தரமாட்டார்கள் என்றார்கள்.

 

நான் எதையும் காதில் வாங்கவில்லை. கொடுக்கப்பட்ட 15 நாட்கள் முடிந்தவுடன் அதே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டேன்.

 

5 வருடமாக அலைக்கழித்த மத்திய அரசு ஊழியர்கள்  தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்ட மறுநாள் காலை 7.00 மணிக்கே என்னுடைய செல் நம்பருக்கு தொடர்பு கொண்டு தம்பி ஏன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டீர்கள்? என்னுடைய உயர் அதிகாரி என்னை கடுமையாக திட்டினார். இன்னும் 2 நாட்களில் உங்கள் கணக்கை இணைத்து பணத்தை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கிறேன் என்று சொன்னார்.

 

என்னுடைய வாழ்க்கையில் எதுவும் எளிதாக கிடைத்ததே இல்லை. போராடித்தான் எல்லாவற்றையும் பெறவேண்டியிருக்கிறது.

 

அம்பை சக்தி.

 

*****************************************************************

 முந்தின அனுபவம் தந்த பாடம் , சொந்தமாக தொழில் தொடங்க எண்ணி ஸ்டேசனரீஸ்,ஜெராக்ஸ்,கலர்பிரிண்ட்,லேமினேசன்,பள்ளி,கல்லூரி, பி.எட், டீச்சர்ஸ் டிரைனிங் தேவையான பொருட்களுடன் புதிய கடையை ஆரம்பித்தேன்.

 

எங்கிருந்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அதுவும் யாருமே கேள்வி கேட்க ஆளில்லை என்று சொல்லக்கூடிய நபர்களை கேள்விக்கேட்கவேண்டும். சமுதாயத்தில் படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும்.

 

அப்படித்தான் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து கம்பெனியை விட்டு வெளியே வந்த நபர்,

தன்னுடைய முதலாளியிடம் "என்னுடைய கணக்குகளை முடித்துவைத்து பி.எப்.பணத்தை தரவேண்டும் என்று

கேட்டிருக்கிறார். எல்லா முதலாளிகளைப்போல அவரும் " பி.எப்.பணமே இல்லை. தரமுடியாது என்று சொல்கிறார். சம்பந்தப்பட்ட நபர் என்னை தேடி வரவில்லை. காலம் அவரை என்னுடைய கடைக்கு வரவைத்தது . என்னிடம் தன்னுடைய நிலமையை சொல்லி புலம்பினார். உடனே நான் "உடனடியாக நடவடிக்கையில் இறங்குகிறேன். ஆனால் முதலாளியை பார்த்து பயந்து பின் வாங்கிவிடக்கூடாது எனச்சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

 

 

அவருடைய கம்பெனி அடையாள அட்டையை வைத்து ஸ்கேன் செய்து நேரடியாக பி.எப்.உதவி கமிஷனர் இ-மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பி, தில்லாக அந்த ஓனர் இ-மெயில் முகவரிக்கு C.C காஃப்பி  அனுப்பினோம்,.

 

விளைவு ஒரு நபருக்கு பி.எப்.பணம் தரமாட்டேன் என்று சொன்னவர் கம்பெனியில் உள்ள 50 பேருக்கு சேர்த்து கட்டும்படி ஆயிற்று. நண்பருக்கும் பி.எப்.பணம் கிடைத்தது.

 

எல்லாப்புகழும் இறைவனுக்கே.

 

அம்பை சக்தி


******************************************************************************************************************************* 


2005-ஆம் ஆண்டு நடந்த சம்பவம்."INDANE GAS" புதிய இணைப்புக்கு

டீலரை அணுகியவுடன் புதிய சிலிண்டர் வேண்டுமானால் கண்டிப்பாக எங்களிடம் ஸ்டவ் அடுப்பு வாங்கவேண்டும் என்றார்கள் இதுதான் நடைமுறை என 99பேர் வாங்கிவிட்டார்கள்.ஆனால் நான் ஸ்டவ் அடுப்பு வாங்கமுடியாது என்றவுடன் கேஸ் இணைப்பு தரமுடியாது என்றார்கள்.

இப்பொழுதுதான் எனக்கு திருமணம் முடிந்தது எங்களிடம் கிப்டாக ஸ்டவ் அடுப்பு இருக்கும்பொழுது நான் ஏன் இன்னொரு ஸ்டவ் அடுப்பு வாங்கவேண்டும் எனக்கேட்டு மெயில் அனுப்பவேண்டிய இடத்திற்கு அனுப்பிய பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனம் என்னை அழைத்து ஸ்டவ் அடுப்பு இல்லாமலே சிலிண்டர் வழங்கியது.


***********************************************************************************************************************************************  

2012-ஆம் ஆண்டு எங்களுடைய வீட்டிற்கு அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வாங்கவில்லை என்றவுடன் நான் தலையிட்டு வாங்கிதருகிறேன் என்றவுடன் எனக்குள்ளாக ஒரு தீர்மானம் எடுத்தேன் எந்த சூழ்நிலையிலும் லஞ்சம் கொடுக்ககூடாது என்று, அதைப்போல வி.ஏ.ஓ, ஆர்.ஐ, தாசில்தார் அலுவலகங்களில் ஏறி இறங்கினேன் எங்கும் 10ரூபாய் கூட கொடுக்கவில்லை.ஒவ்வொரு ஆபிஸிலும் கையெழுத்து ஆகிவந்தவுடன் பியூன் மூலமாகவும், அங்கே குப்பை கூட்டும் ஆயாக்கள் மூலமாகவும் லஞ்சம் வசூல் செய்யப்படுகிறது.எந்த சூழ்நிலையிலும் லஞ்சம் தரமாட்டேன் என்பதை தெளிவுபடுத்திய பிறகு 10நாட்கள் அலையவிட்டார்கள்.கடைசியில் 10ரூபாய் கூட கொடுக்காமல் ஜாதி சான்றிதல் வாங்கிகொடுத்தேன்.


*******************************************************************************************************************************************************

லஞ்சத்திற்கு எதிரான போராட்டங்கள் 

1.என்னுடைய இளமை பருவம் முதல் தந்தையை போல போராட்ட குணம் என்னிடம் காணப்பட்டது.சிறுவயதில் கோவிலுக்கு சென்றுவர அடித்து கட்டாயப்படுத்திய போது கோவிலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருக்கும் திருநீரு,குங்குமம் இவற்றை எடுத்து வந்து கோவிலுக்கு சென்றதாக சொன்னதுதான் நினைவு தெரிந்த நாள் முதல்

என்னுடைய முதல் போராட்டம் என நினைக்கின்றேன். 

அதன்பின் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து அரசியல் ஈடுபாடு இல்லாமல் நண்பர்கள் வட்டத்துடன் விளையாட்டு-(கபடி,கிரிக்கெட்,கால்பந்து,கேரம்,சீட்டு) மற்றும் சமுதாயப்பணிகளில் ஈடுபட்ட நேரம் எங்கள் பகுதியை சேர்ந்த ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் (தீவிர தி.மு.க அனுதாபி) திரு.அப்ராம்சாமி அவர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்வதை போல ரேசன் கடைகளில் மக்களை ஒழுங்கு படுத்துவது,ரேசன் கடைக்காரர்கள் அவருக்கு இனாமாக ஏதாவது கொடுத்தால் எனக்கு எதுவும் வேண்டாம்.மற்றவர்களைப்போல எனக்கும் கொடுத்தால் போதும் என சொன்னது, வரிசையில் நின்று பொருட்களை வாங்கியது இவற்றையெல்லாம் உண்மை , அவர் ஒரு உத்தமர் என்று நம்பி அரசியல் தெரியாத குமுட்டைகள் (என்னையும் சேர்த்து) அப்பொழுது நடைபெற்ற வார்டு கவுன்சிலர் தேர்தலில் அவரை சுயேட்சையாக நிற்க வைத்ததுடன் அரசியல் பக்கமே வராத என்னை எல்லா பெரிசுகளும் சேர்ந்து (தி.மு.க,அ.இ.அ.தி.மு.க,காங்கிரஸ்.........இதில் மட்டும் ஒன்னு சேர்ந்திடுவாங்க.) நாங்கள் களம் இறங்கினால் கட்சி ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் இவர் எப்படியும் வெற்றி பெற வேண்டும் அதற்கு சக்திதான் சரியான ஆள் என்று அரசியல் தெரியாத என்னிடம் (ஆனால் என் ரத்தத்தில் அரசியல் ஊறிப்போய் இருந்ததை நானே அறியவில்லை) தேர்தல் வேளைகளை ஒப்படைத்து எல்லா பெரிசுகளும் சேர்ந்து (தி.மு.க,அ.இ.அ.தி.மு.க,காங்கிரஸ்.........) மறைமுகமாக அவருக்கு ஆதரவளித்தனர்.சம்பந்தபட்ட திரு.அப்ராம்சாமி காலை 6 மணிக்கே என்னுடைய வீட்டு கதவை தட்டுவார்.எனக்கென்று இருந்த

மிகப்பெரிய மறுமலர்ச்சி மன்ற நண்பர்களை அழைத்துக்கொண்டு மக்களை கவரும் விதமாக தேர்தல் வியுகங்கள் வகுக்கப்பட்டன.என்னுடைய செல்வாக்கா? என்னுடைய தந்தையின் செல்வாக்கா என தெரியவில்லை போகும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.அரசியல் கட்சிகள் பணத்தை தண்ணீராக செலவழித்த பொழுது நாங்கள் பழைய டயர்களில் பேப்பர் ஓட்டி விளம்பரம் செய்தோம்.நான் வேட்பாளருடன் செல்லும்பொழுது கையில் மிகப்பெரிய நோட்டு ஒன்றை வைத்து மக்கள் குறைகேட்டு அப்பொழுதே அந்த நோட்டில் எல்லாவற்றையும் பதிவு செய்தோம்.வித்தியாசமான

இந்த முயற்சியின் பலனாக சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.ஏதோ சாதித்து விட்டதைப்போல

நாங்கள் உணர்ந்தோம்.மக்கள் எல்லாம் என்னை பாராட்டினர்.வேட்பாளர் வெற்றி அறிவிப்பு

கூட்டம் அருகிலுள்ள பள்ளியில் நடந்தது.திரு.அப்ராம்சாமி பேசினார் என்னுடைய வெற்றிக்காகஅரும்பாடுபட்ட தி.மு.க,அ.இ.அ.தி.மு.க,காங்கிரஸ்...புள்ளிகளின் பெயரெல்லாம் இடம்பெற்ற இந்த பட்டியலில் என்னுடைய பெயரோ நான் சார்ந்திருந்த மறுமலர்ச்சிமன்ற பெயரோ, நண்பர்கள் பெயரோ இடம்பெறவில்லை.எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் அந்த கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து வெளிநடப்பு

செய்தோம்.எல்லோரும் சமாதானப்படுத்தியும் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். மறுபடியும் நாங்கள் அவரை மதிக்கவே இல்லை.இன்னொரு அம்மாவாசை

ஆகி விட்டார் போல.பரவாயில்லை.தேர்தலுக்கு முன்பு கர்மவீரர் காமராஜர், கக்கன் போல இருந்தவர் அதன் பிறகு தன்னுடைய தலைவனைப்போல (கருநாகம்) ஆகிவிட்டார்.

ரேசன் பொருட்கள் எல்லாம் வீட்டிற்கே வந்தது.மக்கள் பிரச்சனையை பேச வேண்டியவர் மாமன்ற கூட்டத்தில் அப்போதைய தலைவராக இருந்த திருமதி.இராஜம் ஜானிடம் இரண்டு வடை வேண்டும் என கேட்டவர்.இன்று வரை அவரிடம் நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.நம்பிக்கை துரோகி.

 

 

அரசியல் என்றால் என்ன என்று முதல் முறையாக இந்த மீன் குஞ்சு நீந்த கற்றுகொண்டது.

 

 ********************************************************************************************************************************* 

 

 2010-ஆம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் வேலைவாங்கிதருவதாக கொடுக்கப்பட்ட பணம் ரூ.90000 .சிக்கல் நிறைந்த இந்த கேஸில் பணம் கொடுத்ததற்கான எந்த வித சான்றும் இல்லை. சம்பந்தபட்ட இடைத்தரகர் ரிடையர்டு எஸ்.ஐ மேலும் தற்போதைய அமைச்சர் செந்தூர்பாண்டியன் மகன் வேறு இதில் சம்பந்தபட்டிருப்பதாகவும்,பணம் திரும்பகிடைக்க அமைச்சரின் மகன் தடையாக இருப்பதாகவும் ரிடையர்டு எஸ்.ஐ வாக்குமூலம் தருகிறார்.

2014-ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் பணம் திரும்ப கிடைத்தது.அம்மாவுக்கு நன்றி.

மாண்புமிகு அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட 15 நாட்களில் பணம் திரும்ப கிடைக்கப்பெற்றோம் (தி.மு.க ஆட்சியில் ஏமாந்த பணம் அம்மா ஆட்சியில் திரும்ப கிடைத்தது)

Sakthi Kumar <sakthi2791@gmail.com> 
Mar 5

to cmcell


அனுப்புநர்:

************

விக்கிரமசிங்கபுரம் போஸ்ட்,

திருநெல்வேலி மாவட்டம்-62742*

CELL NO.





பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு,

தலைமை செயலகம்,

சென்னை.

cc to cmcell@tn.gov.in


பொருள்:வேலை வாங்கித்தருவதாக ரூ.90000.00(RUPEES NINETY THOUSAND ONLY) பண மோசடி செய்தது தொடர்பாக.

(
அமைச்சர் செந்தூர் பாண்டியன் மகன் குட்டியப்பா (எ) கிருஷ்ணமுரளி மற்றும் அவர் நண்பர் சம்பந்தபட்டிருப்பதாக Rtd.SI. திரு.சண்முகம் சொல்கிறார்.இது குறித்த உண்மை நிலையை அறிந்து என்னுடைய பணம் திரும்ப கிடைக்க ஆவண செய்யவும்.)



சம்பந்தப்பட்ட நபர்கள்

1.Rtd.SI.
திரு.சண்முகம் – CELL NO.*****28542-இடைத்தரகராக செயல்பட்டவர்

2.
தனபால்-பணம் பெற்றவர்-தற்போதைய குளச்சல் MLA J.G.பிரின்ஸ் நண்பர் என்று சொல்லி பணம் பெற்றவர்—CELL NO.****97427


3.
செங்கோட்டை இன்ஸ்பெக்டர் திரு.முனீஸ்வரன்-CELL NO.****56891.(பணம் கொடுத்து ஏமாந்தவர் மீதே பொய்வழக்கு தொடுத்த பொழுது தனபால் அவர்களை கூப்பிட்டு விசாரித்ததில் இன்னும் 15 நாட்களில் முழுபணத்தையும் தந்துவிடுவதாக எழுதி வாங்கியவர்.)



4.
அமைச்சர் செந்தூர் பாண்டியன் மகன் குட்டியப்பா (எ) கிருஷ்ணமுரளி-CELL NO.*****34035.



கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய, தற்போதைய குளச்சல் MLA J.G.பிரின்ஸ் நண்பர் தனபால் மூலமாக வேலை வாங்கித்தருவதாக

Rtd.SI.
திரு.சண்முகம் மூலம் கேள்விபட்டு ரூபாய்.90000.00(RUPEES NINETY THOUSAND ONLY). பணத்தை நான் மற்றும் என்னுடைய தாய்மாமா திரு.***** மற்றும் திரு.**** அவர்கள் திரு.தனபால்(பணம் பெற்றவர்- குளச்சல் MLA J.G.பிரின்ஸ் நண்பர் என்று சொல்லி பணம் பெற்றவர்—cell no.*****97427) அவர்களிடம் வழங்கினோம்.ஆனால் இதுவரை வேலை வாங்கித்தரவும் இல்லை.கொடுத்த பணத்தை கேட்டால் 2 வருடமாக இழுத்தடிக்கிறார்கள். இதில் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மகன் குட்டியப்பா (எ) கிருஷ்ணமுரளி மற்றும் அவர் நண்பர் சம்பந்தபட்டிருப்பதாக Rtd.SI. திரு.சண்முகம் சொல்கிறார்.இது குறித்த உண்மை நிலையை அறிந்து என்னுடைய பணம் திரும்ப கிடைக்க ஆவண செய்யவும்.



இப்படிக்கு

*************




இணைப்பு

இத்துடன் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்



1.Rtd.SI.
திரு.சண்முகம் – CELL NO.*****28542-இடைத்தரகராக செயல்பட்டவர்



2.
தனபால்-பணம் பெற்றவர்-தற்போதைய குளச்சல் MLA J.G.பிரின்ஸ் நண்பர் என்று சொல்லி பணம் பெற்றவர்—CELL NO.*****97427)

அனுப்பியுள்ளோம்.



இதனையே அவர்களுடைய வாக்குமூலம் மற்றும் ஆவணமாக கொண்டு நடவடிக்கை எடுத்து என்னுடைய பணம் திரும்ப கிடைக்க மாண்புமிகு அம்மா அவர்கள் ஆவன செய்யும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு



தங்கள் உண்மையுள்ள

***************


(cc to cmcell@tn.gov.in - mail forwarded by A.S.SAKTHI KUMAR On behalf of ***************
www.admk2011.yolasite.com

www.ambasamudramaiadmk.webs.com )

 

************************************************************************************************************* 


 

TO
CMCELL@TN.GOV.IN

CC TO
HON.TRANSPORT MINISTER,
Mr.SENTHILBALAJI AVL,
mlakarur@tn.gov.in
அண்மையில் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்களிப்பதற்காக என்னுடைய சொந்த தொகுதியான அம்பாசமுத்திரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பாபநாசம் செல்வதற்காக திருநெல்வேலி கோட்டம் சார்ந்த அரசு பேருந்தில் பயணம் செய்தேன்.

2
பேர் உட்காரும் சீட் உடைய இடதுபுறம் முழுவதும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற வகையில்(கைப்பிடி கூட இல்லாமல்) சீட் உள்ளது. நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள் இரவு வேளையில் டிரைவர் வலது புறம் வண்டியை திருப்பினால் கைப்பிடி இல்லாத காரணத்தினால் கீழே விழவேண்டிய நிலை.

அதே நேரத்தில் வலது புறத்தில் (டிரைவர் அமர்ந்த்திருக்கும் பகுதி முழுவதும்) பயணிகள் கீழே விழாமல் இருக்க எல்லா இருக்கையிலும் பாதுகாப்பாக (சீட்டின் இடதுபுறம்) கம்பி இருக்கிறது.

சாலை பாதுகாப்பு விதிகள் வகுக்கும் நாம் காரில் செல்வோருக்கு சீட்பெல்ட் கண்டிப்பாக அணியசொல்கிறோம்.

பணக்காரர்களுக்கு பாதுகாப்பு. அரசு பேருந்தில் பயணம் செய்யும் ஏழையின் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?பயணிகள் கீழே விழாமல் இருக்க தடுப்பு கம்பி கூட இல்லை.

யாராவது பொதுநல வழக்கு தொடருவதற்கு முன்பு பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பை அளிப்பது நமது அரசின் கடமை அல்லவா?
இப்படிப்பட்ட பேருந்துகளில் மாற்றம் செய்யுங்கள்.

A.S.SAKTHI KUMAR @ SAKTHI ASIRWATHAM.,M.COM.,STP,

www.admk2011.yolasite.com

 

**************************************************************************************************************************************************** 

 

STRUGGLE NO. 2 

  

புரட்சிகரமான சிந்தனைகள்

1.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுகடைகளை மூடவேண்டும்.எம் தமிழ் சமுதாயம் சாராயத்தின் பிடியிலிருந்து விடுபடவேண்டும். மது அருந்துபவர்களை அரசு பேருந்துகளிலும், பூங்கா மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனுமதி அளிக்கக்கூடாது.

2.
ஊழல் ஒழிக்கப்படவேண்டும்.அதற்கான முயற்சிகள் என்னிலிருந்து, நான் சார்ந்திருக்கின்ற கட்சியிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். அரசு அலுவலகங்களில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை எங்கும் ஊழல். கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் மூலமே இதனை ஒழிக்கமுடியும்.

3.
வாடகை கட்டிடத்தில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சொந்த கட்டிடம் ஏற்படுத்தப்படவேண்டும்.

4.
தரமான சாலை வசதிகள்,குடிநீர் கிடைக்கசெய்தல்.

5.
வாரம் ஒரு முறையேனும் பஸ் ஸ்டாண்டு (BUS STAND) தண்ணீர் மூலம் சுத்தம் செய்தல்.

6.
அரசு மருத்துவமனைகள் பராமரிப்பு, மக்கள் சேவையில் சிறந்து விளங்கசெய்தல். தனியார் மருத்துவமனைக்கு ஈடாக அனைத்து வசதிகளும் செய்தல். லஞ்சம் வாங்குபவர்களை கண்காணித்து தண்டித்தல்.

7.
தாமிரபரணி நதிகளில் கலக்கும் சாயக்கழிவுகள், சாக்கடை கழிவுகளை கண்டறிந்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.

8.
விவசாய நிலங்களை விற்கும் பொழுது அவை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படவேண்டும். கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது.

9.
நகர்ப்புறங்களில் உள்ளதுபோல ஒவ்வொரு பகுதியிலும் பொதுகூட்டங்கள்
நிகழ்ச்சிகள் நடத்த பெரிய மைதானம் நிரந்தரமாக ஏற்படுத்தப்படவேண்டும்.

10.
மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும் பொருட்டு தரமான விளையாட்டு மைதானம் ஏற்படுத்தவேண்டும்.

11.
ஒவ்வொரு பள்ளியும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் தீவிர கவனம் செலுத்தி சிறந்த மாணவர்களை உருவாக்கவேண்டும்.

12.
குழந்தைகள் பூங்கா எல்லா பகுதிகளிலும் உருவாக்கப்படவேண்டும்.

13.
மணல் அள்ளுவதை முற்றிலும் தடைசெய்யவேண்டும்

14.
அரசை எதிர்பாராமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணம் படைத்தவர்கள் உதவியுடன் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டிகொடுக்கவேண்டும்.

15.
பாபநாசம், அகஸ்தியர் அருவி, சேர்வலாறு, காரையாறு, மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தவேண்டும்.அதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும்.

16.
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.15 விளையாட்டு மைதானங்கள் உண்டெனில் சுழற்சி முறையில் ஒவ்வொரு மைதானத்திலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதே போல புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் பொழுது அனைத்து மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் தொழில் தொடங்கவேண்டும்.

17.
தனியார் வேலைவாய்ப்பு துறை ஒன்றை ஏற்படுத்தி இந்த பகுதிகளில் உள்ள கல்லுரிகளில் படிக்கும்
மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும்.

18.
குற்றம் இழைத்தவர்களுக்கு அரசியல்வாதிகள் ஆதரவு கொடுக்கக்கூடாது.காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவேண்டும்.

19.
அம்பாசமுத்திரம் , கல்லிடைகுறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி பகுதிகளிலிருந்து அடிக்கடி பஸ் போக்குவரத்து துவங்கவேண்டும். பாபநாசத்திலிருந்து வரும் பஸ்களில் இங்குள்ள மக்களுக்கு உட்காரவோ, நிற்கவோ இடம் கிடைப்பதில்லை.மேலும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து சாலைகளை அகலப்படுத்தவேண்டும்.மக்கள் நடந்துசெல்ல நடைபாதைகள் (PLATFORM) கட்டப்படவேண்டும்.

இன்னும் வரும்...........................................................
அன்புடன்
உங்கள் சக்திகுமார் @ சக்தி ஆசீர்வாதம்,M.COM., STP.

****************************************************************************************************************************************************** 

 

 

STRUGGLE NO.3

 

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கடிதம்:
மக்களை பற்றி கவலைப்படாத அரசியல்வாதிகளால் ஆட்சிக்கு அவப்பெயர்

to commr.vikramas., cmcell

மக்களை பற்றி கவலைப்படாத அரசியல்வாதிகளால் ஆட்சிக்கு அவப்பெயர்
(
விக்கிரமசிங்கபுரம் மூன்றாம் நிலை நகராட்சி,திருநெல்வேலி மாவட்டம் PH.NO.04634-220343 )
அண்மையில் வாக்களிப்பதற்காக விக்கிரமசிங்கபுரம் சென்றிருந்தேன்.
நகரை சுற்றி வந்த பொழுது மிகவும் வேதனைப்பட்ட பகுதி முதலியார்பட்டியிலிருந்து(FROM PLAY GROUND TO SANKARAPANDIYAPURAM ROAD) பாபிதியேட்டர் ரோடு வழியாக வந்தது.2 கி.மீ தூரத்திற்கு தார்சாலையே இல்லை.எங்கும் ஜல்லிகற்கள் நிரம்பிகிடக்கிறது.
2
கி.மீ தூரத்தை கடக்க 10-15 நிமிடங்கள் ஆகிறது.இரு சக்கர வாகனங்கள் எப்பொழுது பஞ்சர் ஆகும் என்று தெரியாத அளவிற்கு மோசமான சாலை.
இந்த சாலையில்தான் மினிபஸ் சென்று வருகிறது.பாவம் மக்கள்.

அங்கிருந்த மக்களிடம் விசாரித்தேன்.2 முறை ரோடு போட்டிருக்கிறார்கள்.அதில் ஒரு முறை ரோடு போடாமலே போட்டதாக கணக்கு காண்பித்துவிட்டார்கள்.நாங்களும் பல முறை அ.இ.அ.தி.மு.க.
நகர்மன்ற உறுப்பினரிடம் கேட்டுவிட்டோம்.பதிலே இல்லை அதனால் இந்த முறை நோட்டாவிற்கு வாக்களித்திருக்கிறோம் என்றார்கள்.

நகர்மன்ற தலைவி அந்த பகுதிகளில் சுற்றி வந்திருந்தால் மக்கள் கஷ்டம் புரிந்திருக்கும்.அந்த பகுதியினுடைய மாமன்ற உறுப்பினர் அந்த பதவிக்கே தகுதியில்லாதவர்.உடனடியாக ராஜினாமா செய்யசொல்லுங்கள்.

இப்படி பட்டவர்களால் ஆட்சிக்கு அவப்பெயர்.

நகர் நல அதிகாரிகள் கொஞ்சம் ஊரை சுற்றி வாருங்கள் அப்பொழுதுதான்
மக்கள் படும் கஷ்டம் புரியும்.

நகர்மன்ற தலைவி,மாமன்ற உறுப்பினர்(முதலியார்பட்டி பகுதி),நகர் நல அதிகாரிகள் காலில் செருப்பில்லாமல் அந்த ஜல்லிகற்களில் நடந்து வரச்சொல்லுங்கள் அப்பொழுதாவது புத்தி வரட்டும்.மாண்புமிகு அம்மா அவர்கள் சாட்டையை சுழற்றுவார்களா?

 

************************************************************************************************************************************************* 

 

STRUGGLE NO.4

 

கம்யூட்டர் சான்றிதழ் 18மாதங்கள் கழித்து அம்மாவின் தனிப்பிரிவிற்கு கொண்டுசெல்லப்பட்ட 3 நாட்களில் கிடைத்தது.
அம்மாவுக்கு நன்றி.

To cmcell@tn.gov.in


Dec 28, 2013 UNDER RIGHT TO INFORMATION ACT 2005
(
தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005-இன் கீழ்)

FROM
D.JANSI,
D/O.S.DANIEL RAJ,
47, SUVISESA PURAM STREET ,
EAST KOTTARAM,
PAPANASAM MILLS POST,
TIRUNELVELI DISTRICT-627422.

TO
The Right to Information Officer,
VICKRAMASINGAPURAM MUNICIPALITY,
TIRUNELVELI DISTRICT .


விக்கிரமசிங்கபுரம் மூன்றாம் நிலை நகராட்சியின் சார்பாக அம்பாசமுத்திரம் CSC COMPUTER CENTRE' ல் இலவசமாக சுமார் 25 மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி (under swarnajayanthi shahari rozar yojana) அளிக்கப்பட்டது. கம்யூட்டர் பயின்று சுமார் 18 மாதங்கள் கடந்தும் இதுநாள் வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

நகராட்சி சார்பாக கம்ப்யூட்டர் நிறுவனத்திற்க்கு நிலுவை தொகை வைத்திருப்பதனால் சான்றிதழ் வழங்காமல் மாணவிகள் வாழ்க்கையோடு விக்கிரமசிங்கபுரம் மூன்றாம் நிலை நகராட்சி மற்றும் அம்பாசமுத்திரம் CSC COMPUTER " விளையாடிக்கொண்டிருக்கின்றன.
QUESTION NO.1

சான்றிதழ் எப்பொழுது வழங்கப்படும்?





இத்துடன் மாணவி அம்பாசமுத்திரம் CSC COMPUTER CENTRE' ல் கல்வி பயின்றபொழுது வழங்கிய அடையாள அட்டை நகல் இணைக்கப்பட்டுள்ளது.


CC TO
முதலமைச்சரின் தனிப்பிரிவு
எனவே மாண்புமிகு அம்மா அவர்கள் தலையிட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள்.அரசியல்வாதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாணவிகளுக்கு சான்றிதழ் கிடைக்க ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

 

 

மாண்புமிகு அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட 3 நாட்களில் சான்றிதழ் கிடைக்கப்பெற்றோம்.

************************************************************************************************************************************************** பள்ளிமாணவிக்கு (என்னுடைய அண்ணன் மகள்) வரவேண்டிய உதவித்தொகை ரூ.2000 . பள்ளி முடிந்து 2 வருடங்கள் கழித்து முதலமைச்சர் அம்மாவின் தனிப்பிரிவிற்கு கொண்டுசெல்லப்பட்டவுடன் ரூ.2000 மாணவியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது

புரட்சித்தலைவி அம்மாவிற்கு நன்றி.


************************************************************ 





சாலையோர மோட்டல்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த பேஸ்புக் விமர்சனம் அம்மாவின் தனிப்பிரிவிற்கு கொண்டுசெல்லப்பட்டது.

 

 

STRUGGLE NO.5

 

To cmcell@tn.gov.in,
mlakarur@tn.gov.in

Sep 24, 2013 Selvin Samy Doss shared
பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s photo.

இப்படியும் சில மோசடிகள்...!

நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.

அந்த பேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள். அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை, ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர்
இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒரு ப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்

நான் அந்த இரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக
கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபது ரூபாய்க்கு..

நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்

அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது

அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே மோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..

 

*******************************************************************************************************************************************    

 திருப்பூர் பி.எட் தேர்வுகள் கோயமுத்தூர் மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெறுவதாக ஹால்டிக்கெட் எல்லாம் வழங்கிய பிறகு இது குறித்த நடைமுறை சிக்கல்களை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பழனியப்பன் அவர்களுக்கும் முதலமைச்சர் அம்மா அவர்களின் தனிப்பிரிவிற்கும் கொண்டுசெல்லப்பட்டது. தேர்விற்கு இரண்டு நாட்கள் முன்பு மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் திருப்பூர் பகுதியிலேயே தேர்வு நடைபெற்றது.

புரட்சித்தலைவி அம்மாவிற்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பழனியப்பன் அவர்களுக்கும் நன்றி

STRUGGLE NO.6

 


To mlapappireddipatti@tn.gov.in

May 23, 2013

--- On Wed, 5/22/13, sakthi kumar <sakthi2791@yahoo.com> wrote:

From: sakthi kumar <sakthi2791@yahoo.com>
Subject: Fw: STUDENTS SUFFERING FROM B.ED EXAMINATION CENTRE- OTHER DISTRICT- TRAVEL TIME DAILY 3+3 HOURS-PREGNANT LADIES AFFECTED-STUDENTS FAMILY,CHILDRENS AFFECTED FROM THIS DECISION.
To: coe@tnteu.in
Cc: admin@tnteu.in
Date: Wednesday, May 22, 2013, 11:29 PM


--- On Wed, 5/22/13, sakthi kumar <sakthi2791@yahoo.com> wrote:

From: sakthi kumar <sakthi2791@yahoo.com>
Subject: STUDENTS SUFFERING FROM B.ED EXAMINATION CENTRE- OTHER DISTRICT- TRAVEL TIME DAILY 3+3 HOURS-PREGNANT LADIES AFFECTED-STUDENTS FAMILY,CHILDRENS AFFECTED FROM THIS DECISION.
To: cmcell@tn.gov.in
Cc: coe@tnteu.in, admin@tnteu.in
Date: Wednesday, May 22, 2013, 11:02 PM

FROM

ON BEHALF OF CENTURY FOUNDATION B.ED., COLLEGE STUDENTS & FAMILY

COLLEGE



STUDENTS SUFFERING FROM B.ED EXAMINATION CENTRE.PAST FEW YEARS THE B.ED EXAMINATION CENTRES HELD IN WITHIN THE DISTRICT.



NOW ILLITERATE DECISION MADE BY THE TAMILNADU TEACHERS EDUCATION UNIVERSITY.



NOW EXAM CENTRES HELD IN OTHER DISTRICT- TRAVEL TIME DAILY 3+3 = TOTAL 6 HOURS.



TIRUPUR PEOPLE GO TO PERUR-COIMBATORE DISTRICT.TRAVEL TIME 3 +3 = 6 HOURS.



HOW TO PREPARE NEXT EXAM IN DAILY MORNING?



PREGNANT LADIES AFFECTED BY THIS DECISION AND STUDENT'S FAMILY,CHILDRENS AFFECTED FROM THIS DECISION.



WE REQUEST TO OUR HONOURABLE CHIEF MINISTER SELVI.J.JAYALALITHA. KINDLY ARRANGE TO GIVE EXAM CENTRES WITHIN OUR TIRUPUR DISTRICT .



ON BEHALF OF STUDENTS,

S.SAKTHI KUMAR

www.admk2011.yolasite.com


*************************************************************************************************************************************************
To cmcell@tn.gov.in,
mlapappireddipatti@tn.gov.in,
admin@tnteu.in, and 1 More...

May 28, 2013
THANKS TO OUR HONOURABLE CHIEF MINISTER J.JAYALALITHA FOR TAKING NECESSARY ACTION FOR THIS ISSUES
.



AND THANKS TO OUR HIGHER EDUCATION MINISTER Mr,PALANIAPPAN & TEACHERS EDUCATION UNIVERSITY REGISTRAR & CONTROLLER OF EXAMINATION.



WITH THANKS,

ON BEHALF OF STUDENTS

A.S.SAKTHI KUMAR.

www.admk2011.yolasite.com



 

**********************************************************************************************************************************************

ஜீலை 2019 , அம்பாசமுத்திரம் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு மகனுடன் அதிமுக கரைவேட்டியுடன் சென்றேன். டாக்டர் (பெண் மருத்துவர்), கிளர்க் - வருகையை பதிவு செய்பவர், மற்றும் ஊசி போடும் நர்ஸ். மூன்று பேர் மட்டுமே இருந்தனர். மாத்திரை வழங்கும் நபர் அன்று விடுமுறை போல. ஊசி போடும் நர்ஸ்-க்கு வேலை அதிகமாக இருக்காது என நினைக்கிறேன். 20 பேருக்கு 2-நபர்கள் மட்டுமே ஊசி போடுவர்.

 

அந்த நர்ஸ் நினைத்தால் மாத்திரை வழங்க முடியும். இதற்கு முன்பு பல நேரங்களில் சம்பந்தபட்ட நபர் வராத நாட்களில் இந்த நர்ஸ்-தான் மருந்து. மாத்திரை  வழங்கியிருக்கிறார்.

 

நான் மகனுடன் சென்ற நேரம் கிட்டதட்ட வயதான சர்க்கரை நோயாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட நர்ஸ் மருந்து மாத்திரை வழங்குவது என் வேலையல்ல என்று கூறுகிறார்.  தட்டி கேட்க வேண்டிய பெண் டாக்டர் பயந்து போய் இருக்கிறார். 30 நிமிடமாக காத்திருந்தேன்.

பொறுமை இழந்து ஒரு பெரிய சவுண்ட் விட்டேன்.. மருந்து கொடுக்க ஆள் வருகிறார்களா? இல்லையா?

இன்னும் 10 நிமிடத்தில் ஆள் வரவில்லை எனில் இங்கேயே உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும். இரவு பத்து மணி ஆனாலும் யாரும் வீட்டிற்க்கு செல்லமுடியாது. உங்க டீன் வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றேன். தனியார் துறையில் அவனவன் 14-18 மணி நேரம் வேலை செய்கிறான். உங்களுக்கு இந்த 4 மணி நேரம் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லையா? என கேட்டேன் .சத்தமே இல்லை.

அதன்பிறகு நர்ஸ் சாரியிலிருந்து நர்ஸ் டிரஸ்க்கு மாறினார். டாக்டர் அறைக்கு சென்றார். அடுத்த பத்து நிமிடத்தில் எல்லோருக்கும் மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. அருகிலிருந்த முதியவர் எனக்கு நன்றி சொன்னார்.தம்பி நீங்க மட்டும் கேட்காமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனை மணி நேரம் வரிசையில் நிற்பது என்று தெரியவில்லை.சுகர் நோயாளியான எனக்கு சிறிது நேரத்தில் மயக்கமே வருகிற மாதிரி இருந்தது என்றார்.

 

பெருமைக்காக அல்ல . ஞாயிறு சர்ச்-க்கு செல்லவேண்டிய நேரத்தில் அங்கே அதுவும் கரைவேட்டியுடன் சென்று போராட செய்தது இறைவனின் செயல் என நினைக்கிறேன். எல்லாவற்றையும் கடவுள் முன் குறித்து வைத்திருக்கிறார்.   

********************************************************   

Ambaisakthi

30 July 2018 · 

திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலை மார்க்கமாக நீங்கள் சென்றால் மிகவும் மோசமாக உள்ள சாலை 

மேலப்பாளையம் அருகில் உள்ளது. இதனுடைய சட்டமன்ற உறுப்பினர்.திமுக-வை சார்ந்த டி.பி.எம்.மைதீன் கான். 3 முறை எம்.எல்.ஏ 4 முறை எம்.எல்.ஏ என்பதெல்லாம் இருக்கட்டும். மக்கள் பிரச்சனையை கவனியுங்கள் டி.பி.எம்.

மிகமிக மோசமான சாலை உங்கள் தொகுதியில் மட்டுமே உள்ளது..


Nellaimani Admk அருமை சக்தி நன்றி தொரட்டும் ....


Ambaisakthi இந்த செய்தி டி.பி.எம்.மைதீன் கான் அவர்களின் இ-மெயில் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Sakthi Kumar <sakthi2791@gmail.com> Mon, Jul 30, 2018 at 3:48 PM…See more


Ambaisakthi 9444114444, 9444845739 டி.பி.எம்.மைதீன் கான் அவர்களின் தொலைபேசி எண் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் இந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியபோது எம்,.எல்.ஏ சகோதரர் பேசுவதாகவும்

அவர் வந்தவுடன் மேலப்பாளையம் சாலை பழுதடைந்த விபரத்தை கூறுவதாக சொன்னார்


Ambaisakthi

Ambaisakthi இன்று 02.08.2018 )காலை சரியாக 10.00 மணி அளவில் எனக்கு 8778138453 இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. டி.பி.எம்.மைதீன் கான் அவர்களின் பி.ஏ பேசுவதாகவும் , எம்.எல்.ஏ என்னிடம் பேச விரும்புவதாகவும் சொன்னார்.

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் செல்லும் சாலை (மேலப்ப…See more

Edit or delete this

Like

 · Reply · 1y · Edited

Ambaisakthi

Ambaisakthi டி.பி.எம்.மைதீன் கான் பற்றிய பேஸ்புக் பதிவுகள் அவருடைய தொலைபேசி உரையாடல்கள் அவருடைய தலைமைக்கு மு,.க,ஸ்டாலின் இ-மெயில் முகவரிக்கு mlakolathur@tn.gov.in அனுப்பப்பட்டுள்ளது.

Edit or delete this

Like

 · Reply · 1y

Ambaisakthi

Write a comment...



இன்று 02.08.2018 )காலை சரியாக 10.00 மணி அளவில் எனக்கு 8778138453 இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. டி.பி.எம்.மைதீன் கான் அவர்களின் பி.ஏ பேசுவதாகவும் , எம்.எல்.ஏ என்னிடம் பேச விரும்புவதாகவும் சொன்னார்.

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் செல்லும் சாலை (மேலப்பாளயத்தில் மட்டும்) பழுதடைந்துள்ளதை சுட்டி காட்டினேன். 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலை நடப்பதாக சொன்னார். தான் எதிர்கட்சி எம்.எல்.ஏ என்பதை ஞாபகப்படுத்தினார். நான் 2 முறை எம்.எல்.ஏ, 3 முறை எம்.எல்.ஏ என்பதை சுட்டிகாட்டீனீர்களாமே மக்கள்தான் என்னை தேர்ந்தேடுத்தனர் , என்றைக்கு மக்கள் என்னை தோற்கடிக்கிறார்களோ அன்றைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்ற தத்துவத்தை உதிர்த்தார்.


என்னைப்பற்றி கேட்டார் அம்பாசமுத்திரம் அதிமுக தொகுதி அமைப்பாளர் மகன் என்றதும் அதிமுக காரன் இப்படித்தான் பேசுவான். உங்கள் அம்பை பகுதியில் சாலைகள் சரியாக உள்ளதா? எனக்கேட்டார். 

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் செல்லும் சாலை பற்றித்தான் இப்பொழுது தங்களிடம் புகார் அளித்தேன். இதுகுறித்து பேஸ்புக், டிவிட்டர்,வாட்ஸ்-அப் செய்திகள் வந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.


சரி போனை வைத்துவிடுகிறேன் என்று சொல்லி தானாக கட் பண்ணிவிட்டார்.


அடுத்த 15 நாட்களுக்குள் சாலை பணிகள் விரைவாக நடைபெற்றது.


போராட்டங்கள் தொடரும்.


அம்பைசக்தி